Monday, August 16, 2010

சோள உப்புமா

0 comments


தேவையானவை

வெள்ளை சோளம் - 50 கிராம்

வறுத்த வேர்க்கடலை- 15 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்- 8

பச்சை மிளகாய்- 1

கறிவேப்பிலை- சிறிதளவு

எண்ணை- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு


செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து, சோளத்தைப் பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு, பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.
வதக்கிய பொருட்களுடன் 1 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோளத்தைப் போட்டுக் கிளறி, உப்புமா பதம் வந்ததும் இறக்கவும்.
தேவைப்பட்டால் பீன்ஸ், கேரட் மற்றும் முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்து விவரங்கள்

பெரும்பாலும் வழக்கத்தில் இல்லாத ஒரு தானியத்தை, வளரும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் உணவு இது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், எளிதில் ஜீரணிக்கும்; குழந்தைகளின் மலச்சிக்கலைப் போக்கும். உடலுக்குத் தேவையான அளவு கலோரி மற்றும் புரதம் நிறைந்தது. பி&காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் ஏற்படாமல் பாதுகாக்கும். இதை காலை அல்லது இரவு உணவாக 5 வயது முதல் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

சென்னா மசாலா

0 comments

தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை 1 கப்
சின்ன வெங்காயம் 3
தக்காளி (நன்கு பழுத்தது) 2
இஞ்சி 1 சிறிய துண்டு
பூண்டு 8 பல்
புளி எலுமிச்சை அளவு
வெல்லம் 1 தேக் கரண்டி
டால்டா 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
ஏலக்காய் 1
லவங்கம் 1
பட்டை 1
நெய் தாளிக்க
உப்பு தேவையான அளவு
நன்கு அரிந்த கொத்தமல்லித்தழை அழகுபடுத்த


செய்முறை:


நன்கு ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலம், லவங்கம், பட்டை எல்லாவற்றையும் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளிகளை வெந்நீரில் போட்டு தோலை உரித்துத் தனியே அரைத்துக் கொள்ளவும்.

சூடான வாணலியில் நெய்யை விட்டு, நெய் இளகியவுடன் சிறிதளவு சீரகத்தைப் போடவும். சீரகம் வெடிக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைக் கொட்டி நெய் தனியே பிரியும் வரை கிளறவும்.

பிறகு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். உப்பு, மிளகாய்த்தூள், புளி, வேகவைத்த கொண்டைக்கடலையை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இக்கலவை ஓரளவு கெட்டியானவுடன் அரிந்த கொத்தமல்லித்தழைகளையும், பச்சை மிளகாய்களையும் தூவி பரிமாறவும். தேவைப்பட்டால் இதனுடன் வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.


ஊட்டச்சத்து விவரங்கள்:


வெள்ளை கொண்டைக்கடலை புரதம் அதிகம் நிறைந்தது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். 4 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாகவோ அல்லது இரவு சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவோ கொடுக்கலாம்.

Monday, August 2, 2010

இட்லி காய்கறி உருண்டை

0 comments

தேவையான பொருட்கள்: இட்லி - 10சின்ன வெங்காயம் - 5பச்சை மிளகாய் - 1கேரட் - 50 கிராம்முட்டைக்கோஸ் - 50 கிராம் பச்சைப்பட்டாணி - 50 கிராம்எண்ணை - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:பச்சைப்பட்டாணி மற்றும் முட்டைக்கோசை வேகவைத்துக் கொள்ளவும்¢. வாணலியில் எண்ணை ஊற்றி, அத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பிறகு வேகவைத்த காய்கறிகளையும் போட்டு வதக்கவும். வதக்கிய கலவையுடன் உதிர்¢த்து வைத்திற்கும் இட்லியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இதனை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும். பழங்காலத்தில் உள்ள Ôஉருண்டைச்சோறைÕ ஞாபகப்படுத்தும் இது, பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.